Wednesday, June 21, 2017

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில்  பல்வேறு சமூக நலப்பணிகளை செய்துவருகிறது. கண்ணியமிகு ரமழான் மாதத்தில் உள்ளங்களை ஒருங்கிணைக்கும் விதமாக கடந்த 18.06.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை யூனிட் சார்பாக  ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சி  அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இமாம். நூருல் ஹசன் பாகவி, அவர்கள்  ''மாற்றம்'' என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். 
நிகழ்ச்சிக்கு நமதூரை சேர்ந்த சகோதரர்கள்,வெளியூர் சகோதரர்கள் , பல்வேறு இயக்கத்தை சேர்ந்த சகோதரர்கள், பொதுமக்கள் என திரளாக 150க்கும்  மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு இறையச்சத்தை மேம்படுத்துவதாகவும் , புனித ரமழானில் வலிமையான சகோதரத்துவத்தை பேணுவதாகவும் , சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்தது... 






0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza