Thursday, September 18, 2014

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: நிவாரணப் பணிகளில் களமிறங்குகிறது பாப்புலர் ஃப்ரண்ட்!

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலம் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செயல்படுத்தப்போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்மீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை துவங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தயார் நிலையில் உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நிலவி வரும் நிலைமையை ஆராய்ந்துள்ளது.

Sunday, September 14, 2014

புதுவலசையில் NWF நடத்திய மாதாந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி...!

சமூகத்தை புணரமைக்கும் பணியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது . அதை நிறைவேற்றும் நோக்கில் தேசிய அளவில் உருவாக்கப்பட்டது தான் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட். மாதாந்திர ஒழுக்கப் பயிற்சி முகாம் , விழிப்புணர்வு பிரச்சாங்கள், கருத்தரங்குகள், குடும்ப நல ஆலோசனைகள் உட்பட பெண் சமூகத்தை முன்னேற்றும் விதமாக பல சமூகப் பணிகளை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் செய்து வருகின்றது.

Dua For Gaza