Friday, June 20, 2014

ஏர்வாடிதர்ஹாவில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை


எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் கூறியதாவது,

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் அலங்கார வாயில் அருகே பல ஆண்டுகாலமாக சாலையோர வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித  இடையூறு இல்லாமலும்,போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.ஆனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி  இவர்களது கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பாஜக அரசு இரயில் கட்டணத்தை உயர்த்தியது மக்கள் விரோத செயல்! எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி கூறியதாவது,
புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுபட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சாதாரண மக்கள் பெரிதும் உபயோகிக்கும் இரயிலின் பயணக் கட்டணத்தை 14.2 சதவீதம் அளவிற்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மேலும் சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  

தேவாலயங்கள் மீது கல்வீச்சு:- எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கண்டனம்!


இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஸ் குமார் கடந்த 18.06.2014 அன்று இரவு 10:30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழி எங்கும் அதன் தொண்டர்கள் பேருந்துகள் மீதும், தொழில் நிருவனங்கள் மீதும் கற்களை எரிந்து பதட்டத்தை ஏற்படுத்தினர்.

மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், தேவாலய ஊழியர்களின் வாகனங்கள் மீதும் கற்களை எரிந்து சேதப்படுத்தி உள்ளனர்.

வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசுக்கு வேண்டுகோள்!



திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 18.06.14 அன்று இந்து முன்னணி மாவட்ட தலைவர் K.P.S.சுரேஷ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைத்து விரைந்து தேடி வரும் நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளங்கள், கிருஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டும். கடைகள் உடைக்கப்பட்டு பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. வழியில் செல்லும் முஸ்லிம் பெண்கள் உட்பட பொதுமக்கள் அனைவரின் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தி கீழ்த்தரமாக நடந்துள்ளார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி இலங்கை தூதரகத்தில் கூட்டமைப்பு சார்பில் மனு

islamiya koottamaippu
இலங்கையில் கடந்த காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ம் தேதி நடைபெற்ற வன்முறையில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் பளிவாசல்களும், வீடுகளும், தொழில் நிறுவனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இலங்கை முஸ்லிம்களின் மீது மீண்டும் இனவெறி தாக்குதல் - இலங்கை அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்!


இலங்கை களுத்துறை மாவட்டம் அளுத்காமாவில் பொதுபலசேனா என்ற சிங்கள இனவெறி அமைப்பு ஒன்று நடத்திய ஊர்வலத்தில் முஸ்லிம்களை குறிவைத்து ஏற்படுத்திய கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை மூன்று முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை தடுக்காத இலங்கை அரசை கண்டித்து இன்று (19-06-2014) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Thursday, June 19, 2014

போராளிகளின் பார்வையில் நோன்பு

இன்றைய சூழ்நிலைகளை பற்றி நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றோம். ஒரு புறம் சமூகத்திற்கு பிரச்சனை, மற்றொரு புறம் சமூகத்திற்க்குள் பிரச்சனை. இந்த இரண்டையும் விவேகமாக கையாள்வதில் தான் இஸ்லாத்தின் வெற்றியும் நம்முடைய லட்சிய பயணத்தின் இலக்கும் அடங்கியிருக்கின்றது.
நம்முடைய (இஸ்லாத்தின்) எதிரிகள்  இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் துடைத்து எரிவதற்கு, முஸ்லிம்களை பிரித்தாளும் சூழ்சியின் மூலம் இன்று ஆட்சிகட்டிலில் அமர்ந்து அவர்களுடைய நீண்ட நெடிய திட்டத்தை அடைந்திருக்கின்றனர்.

தாமதமான நீதிக்கு என்ன பெயர்?

செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...
“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின் தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக இருந்துள்ளது...

Sunday, June 15, 2014

சமூக அமைதியை கெடுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மத துவேச நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் வடக்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் ஊராட்சியில் அமைந்துள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் இரு தினங்களாக நடைபெற்றுள்ளது.அதனை தொடர்ந்து இன்று(14.06.2014) மாலை தேவிப்பட்டிணத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கையில் உருட்டுக்கட்டை ,சீருடையுடன் வீதிகளில் பேரணியாக சென்றுள்ளனர்.

Monday, June 9, 2014

துபையில் EPMA கலந்தாய்வு கூட்டம்..!

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வருடங்களைப் போலவே  இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்துவது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இவ்வருடம் முதல் நமதூரில் இருந்து  வெளியூர்களில் சென்று படித்து சாதனை படைக்கும் மாணவ,மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

Friday, June 6, 2014

இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் கொலை: இந்து அமைப்புக்கு தடை?

புனேவில் இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட இந்து அமைப்பினை தடை செய்ய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்படும் என்று புனே காவல்துறை ஆணையர் கூறினார்.
சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (வயது 24) என்பவர் புனேவில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் திங்கள்கிழமை மாலை தொழுகைக்குச் சென்று திரும்பினார். அப்போது, அவர் மீது திடீரென சிலர் சரமாரியாக ஹாக்கி பேட்களால் அடித்துத் தாக்கினர். அதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Thursday, June 5, 2014

துபையில் EPMA சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி


கடந்த பலவருடங்களாக EPMA சார்பாக நமதூருக்கு பல்வேறு நலப்பணிகள் செய்துவருவது தாங்கள் அறிந்ததே. அதில் முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் நாம் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்கள் அதன் அடிப்படையில் நமதூர் வாழ் மக்களை கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அதன் பக்கம் உந்தி தள்ளுவது நமது கடமை. 

Sunday, June 1, 2014

அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?

க்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 

Dua For Gaza