Wednesday, October 30, 2013

ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் பாசிச அஜண்டாவை செயல்படுத்துகின்றன – எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

press relese(27.10.2013)
 புதுடெல்லி:இந்தியாவில் ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச அஜண்டாவை நடைமுறைப்படுத்துவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) தேசிய செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தியை கூட ரகசிய புலனாய்வு பிரிவு, தனது ரகசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
உபயோகித்துள்ளது என்பதற்கான ஆதாரம் தான் அவரது முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கை.முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புண்டு என்று அறிக்கை வெளியிட்ட ராகுல் காந்தி நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தேசிய செயற்குழு தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.

காஸாவில் ராணுவ பயிற்சி மையத்தை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்!



காஸாவில் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தாக்குதல் நடத்தியுள்ளன. வடக்கு காஸாவில் ஹமாஸின் ராணுவ பயிற்சி மையத்தை குறி வைத்து ட்ரோன் விமானத்திலிருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்தன.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் யாருக்கும் காயமுற்றதாக தகவல் இல்லை. ராணுவ மையத்திற்கு அருகே ஏவுகணைகள் விழுந்தன. இவ்வேளையில் யாரும் அங்கிருக்கவில்லை.

Sunday, October 27, 2013

சர்ச்சைக்குரிய கருத்து: ராகுல்காந்தி வீட்டை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்! - உருவ பொம்மை எரிப்பு!



மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உ.பி., முஸாஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதாக கூறி நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

முஸாஃபர் நகர் கலவர பாதிப்புக்கு நிதி ஒதுக்கீடு! - 1800 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் உதவி!



முஸாஃபர் நகர் கலவரம் குறித்த மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கி உ.பி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்படி அசையும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எனவும் அசையா சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தக்கவாறு ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேல் எனவும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

Saturday, October 26, 2013

காமன்வெல்த் மாநாடு: சட்டசபை தீர்மானம் வரவேற்கத்தக்கது! – எஸ்.டி.பி.ஐ


mubarak

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற  தமிழக சட்டசபையின்  தீர்மானம்  வரவேற்கதக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கூறியுள்ளது. இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை  நடத்தக் கூடாது, இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை தமிழக சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ,எஸ்,ஐ தொடர்பு! - ராகுலின் சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு கண்டனம்!



முஸாஃபர் நகரில் வகுப்புவாதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு இருப்பதாக கூறிய ராகுல்காந்தியின் அறிக்கை  முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
முஸாஃபர் நகரில் வகுப்புவாதக் கலவரத்தால் சொந்தங்களையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் முஸ்லிம்களுக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு இருப்பதாக கூறிய ராகுலின் அறிக்கைக்கு முஸ்லிம் அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Monday, October 21, 2013

இஸ்ரேல் சிறைகளில் கொடிய சித்திரவதைகளை அனுபவிக்கும் ஃபலஸ்தீன் குழந்தைகள்: யுனிசெஃப் அறிக்கை!



இஸ்ரேல் சிறைகளளில் ஃபலஸ்தீன சிறுவர்கள் கொடிய சித்திரவதைகளை அனுபவிப்பதாக ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃபின் அறிக்கை கூறுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொடுமைகள் குறித்து ஏழு மாதங்கள் முன்பு யுனிசெஃப் முதல் கட்ட அறிக்கையை அளித்திருந்தது. இதன் பின்னரும் அதே நிலை தொடருவதாக புதிய அறிக்கை கூறுகிறது.

இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு?


Islamic Bank

புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் ஆதரவாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saturday, October 19, 2013

காணாமல் போன சென்னை ஹஜ் பயணி இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் ஊழியரால் கண்டுபிடிப்பு!


iff

ஜித்தா: சென்னையில் இருந்து புனித ஹஜ் யாத்திரை சென்று, இறந்ததாகக் கருதப்பட்ட ஒரு புனிதப் பயணி, மக்காவில் உள்ள மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் என்பவர் தன் மனைவி பதருந் நிசாவுடன் சேர்ந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். அவர்கள் யாத்திரையின் முதல் நாளன்று பிரிந்து விட்டனர். நான்கு நாள்களாகத் தேடியும் பரக்கத்துல்லாஹ்வைக் காணாததால் அவர் இறந்து விட்டதாக அவரது யாத்திரைக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் கருதினர்.

Saturday, October 12, 2013

முஸாஃபர் நகரில் மீண்டும் கலவரம்: 2 பேர் பலி!



அண்மையில் வகுப்புக் கலவரம் நடந்த உ.பி மாநிலம் முஸாஃபர் நகரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் 2 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பசேந்திரோட் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் ஆபித் (வயது 28). தனது முடி திருத்தும் கடையில் இருந்து திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆபிதின் மீது துப்பாக்கியால் சரமாரி சுட்டார்கள். இதில் ஆபித் பலியானார். ஆபிதின் கொலையைத் தொடர்ந்து ஊர்மக்கள் கொந்தளித்தனர். நகரத்தில் துணை ராணுவப் படை நிறுத்தப்பட்டுள்ளது.

மோடி பிரதமரானால் கலவர வழக்குகள் மறக்கடிக்கப்படும்! - குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார்!



மோடி பிரதமரானால் குஜராத்தில் அவர் தலைமை வகித்த கலவரம் தொடர்பான வழக்குகள் காணாமல் போகும் என்று மோடிக்கு எதிரான சட்டரீதியான போராட்டங்களின் மூலம் பிரசித்திப் பெற்ற குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
கொச்சிக்கு வருகை தந்த ஆர்.பி.ஸ்ரீகுமார் அளித்த பேட்டியில் கூறியது:
வழக்குகளை அழித்தொழிக்கவே மோடியை பிரதமராக்க பா.ஜ.க படாத பாடு படுகிறது. மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் தற்போது அச்சத்தால் மெளனம் சாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

Tuesday, October 8, 2013

சவூதி: ஜித்தா இந்திய துணை தூதரகத்தின் அவசர அறிவிப்பு!

ஜித்தா: சவூதி ஜித்தா இந்திய துணை தூதரகம் இன்று (07.10.2013) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சவூதி அரசின் 'நிதாகத்' புதிய தொழிலாளர் கொள்கையின் மூலம் வெளிநாட்டவர்கள் தங்களது விசா நிலையை சரி செய்து கொள்ள வரும் நவம்பர் 3ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்நிலையில், இதுவரை தனது நிலையை சரி செய்து கொள்ளாத சவூதி வாழ் இந்தியர்கள் அவர்களின் நிலையை சரி செய்து கொள்ளும் விதமாக இந்தியத் தூதரகங்கள் இரவு பகலாக பணி புரிந்து இந்தியர்களுக்கு உதவி வருகின்றன.

சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி! பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முகமது அறிக்கை:


தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து தொடர் பிரச்சாரத்தை செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது. இதன் இறுதி தினமான அக்டோபர் 6 ம் தேதி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. 

முஸாஃபர்நகரில் கூட்டு பாலியல் வன்கொடுமை! - விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை அமைப்பு கோரிக்கை!



முஸாஃபர்நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
'நிவாரண பணிகளுக்கும், மறுவாழ்வுக்குமான சூழல்களை உருவாக்கவேண்டும். அகதிகளுக்கு சொந்த வீடுகளுக்கு திரும்பவும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சூழலை ஏற்படுத்தவேண்டும்.’ என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வலியுறுத்தியுள்ளது.

Monday, October 7, 2013

சிறை நிரப்பும் போராட்டம் - சென்னை மற்றும் மதுரையில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!



தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும்,பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் ,கருப்பு சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் இன்று (06.10.2013) நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மதியம் 12 மணியளவில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

Sunday, October 6, 2013

முஸஃபர்நகர்: பாப்புலர் ஃப்ரண்டின் முதல் கட்ட நிவாரணப் பணி நிறைவு!


M_Id_421480_unease_

புதுடெல்லி: முஸஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணியின் முதல் கட்டம் நிறைவுற்றதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம். அப்துல் ஸலாம் தெரிவித்துள்ளார்.

கிராமங்கள் ரீதியாக சர்வே, சட்ட உதவி ஆகியவற்றிற்காக பாப்புலர் ஃப்ரண்ட் மூன்று குழுக்களை நியமித்திருந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 38 கிராமங்களில் தற்காலிகமாக அபயம் தேடியது சர்வேயில் தெரிய வந்தது. 

வக்ஃப் சொத்துக்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும்!: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கோரிக்கை


all

புதுடெல்லி: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுக்குழு கூட்டம், டெல்லி ஜாமிஆ நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இதில் அடுத்த இரண்டு (2013-2014) வருடத்திற்கான தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Wednesday, October 2, 2013

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சென்னையில் மனித சங்கிலி போராட்டம்


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (02.10.2013)சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.உயர்நீதிமன்றம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.

கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா,ரத்தினம்வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீத்தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முஸாஃபர் நகரில் கலவரக்காரர்களுக்கு போலீஸ் உதவியது: வழக்குரைஞர் என்.டி.பஞ்சோலி விசாரணை அறிக்கை!



போலீஸ் ஒத்தாசையுடன் ஜாட் இனத்தவர்கள் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதலே கடந்த மாதம் முஸஃபர் நகரில் நடந்த கலவரம் என்று பி.யு.சி.எல் என்ற மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி வழக்குரைஞர் என்.டி.பஞ்சோலி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடக்கும் வேளையில் போலீஸை உதவிக்காக அழைத்தபோது யாரும் தயாராகவில்லை. ஆனால், அதற்கு பதிலாக ஜாட் இனத்தவர்களுடன் இணைந்து கொள்ளை, வன்முறைகளில் போலீஸ் பங்கேற்றது என்று பாதிக்கப்பட்டவர்கள் விவரித்ததாக முஸஃபர் நகரில் பொதுமக்கள் விசாரணைக்கு தலைமை வகித்த வழக்குரைஞர் என்.டி.பஞ்சோலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். என்.சி.ஹெச்.ஆர்.ஓ அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை விபரங்களையும் செய்தியாளர்கள் சந்திப்பில் பஞ்சோலி தெரிவித்தார்.

கிரிமினல்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் பயம்! மோடி சிக்கவைக்கப்படுவதாக ஜெட்லி பிரதமருக்கு கடிதம்!



கிரிமினல் அரசியல்வாதிகள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் போலி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ மூலம் குஜராத் முதலமைச்சரும், பாஜக பிரதமர் வேட்பாளரிமான நரேந்திர மோடி குறிவைக்கப்படுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அப்பாவி முஸ்லிம்கள் கைது விவகாரம் உள்துறை அமைச்சரின் கடிதம் வரவேற்கத்தக்கது-SDPI

press relese(01.10.2013)
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நாடு முழுவதும் தீவிரவாத சம்பவங்களை காரணம் காட்டி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் 10 வருடங்களுக்கு மேல் சிறையில் வாழ்க்கையை இழந்த பிறகு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி தேசம் முழுவதும் போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி மீதான தாக்குதலுக்கு SDPI கடும் கண்டனம்!

PRESS RELESE(01.10.2013)
 இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

கடந்த வாரம்  28 ஆம்தேதி விருத்தாச்சலத்தில் திராவிடர் கழக சார்பில மாணவர் அணி மாநாடும் அதையொட்டி கருத்தரங்கமும் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியும் நடைபெற்றது.

Tuesday, October 1, 2013

தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களைத் தண்டிக்கக் கூடாது!: ஷிண்டே


sus

புதுடெல்லி: தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு:
சமீப காலமாக அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதம் என்ற பெயரில் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. தவறுதலாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.

Dua For Gaza